1 கோடி ரூபாய் நான் தருகிறேன் என் மகள் மற்றும் பேரனை திரும்ப தர முடியுமா.. வேதனையில் கதறும் தந்தை..!

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற‌னர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வ‌ழங்கப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த தேஜஸ்வினியின் தந்தை மதன் இதனை பற்றி கூறுகையில், ”எனது மருமகன் கண்விழித்ததும் மனைவி, மகள் இறந்ததை கேள்விப்பட்டு கதறி அழுதார். அவரது இழப்புக்கு அரசால் இழப்பீடு தர முடியுமா? எங்களுக்கு அவர்களின் இழப்பீடு எதுவும் தேவையில்லை. 

அவர்களுக்கு நான் ரூ.1 கோடி தருகிறேன். இறந்துபோன எனது மகள் மற்றும் பேரன் உயிரை முதல்வர் பசவரா ஜால் திருப்பித் தர முடியுமா? என்று கேட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் அலட்சியத்தோடு செயல்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும். இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் நிறைய மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என எச்சரித்துள்ளார். 

1newsnationuser5

Next Post

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் எத்தனை வயது வரை டெபாசிட் செய்ய முடியும்? முழு விவரம் இதோ…

Thu Jan 12 , 2023
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க […]
Post Office Saving Schemes 1460709527

You May Like