பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அத்துடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த தேஜஸ்வினியின் தந்தை மதன் இதனை பற்றி கூறுகையில், ”எனது மருமகன் கண்விழித்ததும் மனைவி, மகள் இறந்ததை கேள்விப்பட்டு கதறி அழுதார். அவரது இழப்புக்கு அரசால் இழப்பீடு தர முடியுமா? எங்களுக்கு அவர்களின் இழப்பீடு எதுவும் தேவையில்லை.
அவர்களுக்கு நான் ரூ.1 கோடி தருகிறேன். இறந்துபோன எனது மகள் மற்றும் பேரன் உயிரை முதல்வர் பசவரா ஜால் திருப்பித் தர முடியுமா? என்று கேட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அலட்சியத்தோடு செயல்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும். இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் நிறைய மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என எச்சரித்துள்ளார்.