இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஒரு நபரின் சொத்துக்களில் 55% பங்கை அமெரிக்க அரசாங்கம் கோருவதற்கு உரிமையுடைய ஒரு பரம்பரை வரி உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ”அமெரிக்காவில், பரம்பரை வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால், அவர் இறக்கும் போது அவர் தனது குழந்தைகளுக்கு 45% மட்டுமே மாற்ற முடியும். மீதமுள்ள 55% அரசாங்கத்தால் பறிக்கப்படுகிறது.
இந்தியாவில், உங்களிடம் அந்த சட்டம் இல்லை. ஒருவன் 10 பில்லியன் சொத்து மதிப்புடையவன். அவன் இறந்தால், அவனுடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் கிடைக்கும். பொதுமக்களுக்கு ஒன்றும் கிடைக்காது. எனவே, இந்த மாதிரியான பிரச்சனைகளைத்தான் மக்கள் விவாதிக்க வேண்டும். நாளின் முடிவில் என்ன முடிவு வரும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் செல்வத்தை மறுபங்கீடு செய்வது பற்றி பேசும்போது, புதிய கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்களைப் பற்றி பேசுகிறோம். அது மக்களின் நலனுக்காக மட்டுமே. பெரும் பணக்காரர்களின் நலனுக்காக அல்ல” என்று தெரிவித்தார்.
பரம்பரை வரி குறித்த சாம் பிட்ரோடாவின் கருத்துகளுக்கு பதிலளித்த பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமித் மாளவியா, “காங்கிரஸ் இந்தியாவை அழிக்க முடிவு செய்துள்ளது. இப்போது, சாம் பிட்ரோடா சொத்து மறுபங்கீட்டிற்கு 50 சதவீத பரம்பரை வரியை பரிந்துரைக்கிறார். இதன் பொருள், நமது கடின உழைப்பு மற்றும் தொழில் மூலம் நாம் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் பறிக்கப்படும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாம் செலுத்தும் அனைத்து வரிகளும், உயரும்” என்று தெரிவித்தார்.
Read More : HBD Sachin | கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்..!! சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள்..!!