இதை செய்யாவிட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்..!! – அரசு முக்கிய அறிவிப்பு

Ration Card 2025

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது, போலி கார்டுதாரிகளை நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை அகற்றுவது போன்ற காரணங்களுக்காக இப்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை விரல்ரேகை பதிவு செய்யாத பயனாளிகள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. வெளியூரில் இருப்பவர்களும், எந்த ஒரு நியாயவிலைக் கடையிலும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுவதற்கேற்ப, பதிவு செய்யாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்பதும் உறுதியான எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு இவ்வகை பயனாளிகள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லாததால், மாநிலங்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இதனால், பலரும் ரேஷன் பெற்று பயன்படுத்தாமல் இருப்பதும், முறைகேடுகள் ஏற்படுவதும் கவலையளிக்கிறது. இதனைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த Bio-metric பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, AAY மற்றும் PHH ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தாமதிக்காமல் உடனடியாக கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இல்லையெனில், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read more: அதிமுக முன்னாள் MLA அறிவழகன் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

Next Post

செப்டிக் டேங்கில் புதைக்கப்பட்ட 796 குழந்தைகள்!. மர்மம் விலகாத ஐரிஷ் தேவாலய மரணங்கள்!. பகீர் பின்னணி!

Tue Jul 15 , 2025
அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் […]
796 children buried in septic tanks 11zon

You May Like