சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ்( 23). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, போக்சோ போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ்( 26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக பழகி வந்துள்ளார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நண்பர் லோகேஷ் வீட்டின் இல்லாத சமயத்தில் ரவுடி பவுல்ராஜ் அவரது மனைவியுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அதோடு இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் லோகேஷிற்கு தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக தன்னுடைய மனைவி சத்யா மற்றும் நண்பர் பவுல்ராஜிடமும் பலமுறை லோகேஷ் கண்டித்திருக்கிறார்.. இந்த நிலையில் தான் கடந்த 4ம் தேதி தன்னுடைய மனைவியுடன் பவுல்ராஜ் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகேஷ், இருவரையும் கண்டித்து இருக்கிறார் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஆத்திரம் கொண்ட லோகேஷ் பவுல்ராஜை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொன்டிருந்த பவுல்ராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பவுல்ராஜ் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லோகேசன் கைது செய்துள்ளனர்