உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி ஒரு காரியத்த செய்வ….? கள்ளக்காதலி கண்முன்னே காதலன் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…….!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வகணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (29). கார் ஓட்டுனராக இவர் பணிபுரிந்து வருகிறார் அதோடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் இவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு ள்ளது. பின்னர் விஜயலட்சுமி, சுரேஷ்குமார் இருவரும் கணவன் மனைவியை போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று வழக்கம் போல சுரேஷ்குமார் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.


அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்கும் விஜயலட்சுமி கண்முன்னே அவருடைய கள்ளக்காதலன் சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் சமூக இடத்திலேயே சுரேஷ்குமார் உயிரிழந்தார். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சுரேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெட்டு காயம் அடைந்த விஜயலட்சுமியின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது விஜயலட்சுமியின் முதல் கணவர் சத்யாவின் தூண்டுதலின் பெயர்தான் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். என்ற விவரம் தெரியவந்தது. ஆகவே கொலையாளிகளை பிடிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதி சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றன.

Next Post

உறங்கிக் கொண்டிருந்த முதியவரை அடித்து கொலை செய்து பணத்தை பறித்துச் சென்ற மர்மகும்பல்….! புதுச்சேரியில் பரபரப்பு…..!

Thu Jun 29 , 2023
புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(57). இவர் தனியார் நிறுவன காவலாலியாக வேலை பார்த்த வந்தார். இவருடைய மனைவி காளியம்மாள் என்கின்ற காஞ்சனா இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில், முத்துக்குமரன் நேற்று காலை புதுவை வெள்ளாளர் வீதியில் இருக்கின்ற வங்கி அருகே உள்ள வாய்க்காலில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த […]
murder with frnds

You May Like