காதலனுடன் ஒரே அறையில் பள்ளி மாணவி.. உள்ளே வந்த தாய்.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..!!

love1 1757260935 1

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர் நாச்சியார் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் ஒரு மகள் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்றொரு மகள் காவியா(15) அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.


காவியா அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாணியன் மகன் ஆகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 மாதமாக காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆகாஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த காவியா ஆகாஷுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் காவியா வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து மன வருத்தத்துடன் பேசியுள்ளனர். எப்படியும் சம்மதிக்க மாட்டார்கள் என நினைத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஆகாஷும், காவியாவும் தற்கொலை செய்து கொண்டனர். காவியாவின் தாய் வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: சிக்கலான எலும்பு முறிவுகளை சரிசெய்யக்கூடிய Glue Gun..! விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!

English Summary

In Virudhunagar district, a 10th grade student committed suicide with her boyfriend after her parents disapproved of her love.

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! இனி போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாது..!! கூட்டுறவு சேமிப்பு சங்கம் அதிரடி அறிவிப்பு..!!

Mon Sep 8 , 2025
தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 […]
TN Bus 2025 1

You May Like