குஜராத் மாநில பகுதியில் உள்ள வல்சாத் வாபி நகருக்கு அருகில் கால்வாயில் சிறுவன் ஒருவனின் உடல் சிதைந்து பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக கிடந்த சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும் இவர் டிசம்பர் 29ம் தேதி சிறுவன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் “பணக்காரன் ஆகவேண்டும்” என்று சிலர் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டிருப்பாடன் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியை டிசம்பர் 29 தேதி அன்று, சைலி கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி சென்று நரபலி குடுத்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நரபலிக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் கிடைத்த எச்சங்கள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.