பணக்காரன் ஆகவேண்டும் என சிறுவன் நரபலி சம்பவம்..!

குஜராத் மாநில பகுதியில் உள்ள வல்சாத் வாபி நகருக்கு அருகில் கால்வாயில் சிறுவன் ஒருவனின் உடல் சிதைந்து பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.


சடலமாக கிடந்த சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும் இவர் டிசம்பர் 29ம் தேதி சிறுவன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் “பணக்காரன் ஆகவேண்டும்” என்று சிலர் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டிருப்பாடன் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியை டிசம்பர் 29 தேதி அன்று, சைலி கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி சென்று நரபலி குடுத்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நரபலிக்கு பயன்படுத்திய ஆயுதங்களுடன் கிடைத்த எச்சங்கள் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

திருமணத்திற்கு சிலமணி நேரத்திற்கு முன்பு உயிரிழந்த மணப்பெண்.. காரணம் இதுதானா..!

Fri Jan 13 , 2023
லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.  இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது.  […]
dead body

You May Like