Income Tax: தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை 24 × 7 கட்டுப்பாட்டு அறை…!

தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.

96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடைபெறவிருக்கும் 2024ம் ஆண்டுக்கான மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை, தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைபேசி எண்,மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தகவலை பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669.. மின்னஞ்சல் (e-mail) tn.electioncomplaints2024@incometax.gov.in.. வாட்ஸ் அப் எண்: 94453 94453

Vignesh

Next Post

Palani: 2024ல் வரும் அபூர்வ பங்குனி உத்திரம்!… பழனியில் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!… திருமண வரம் தரும் என்பது ஐதீகம்!

Mon Mar 18 , 2024
Palani: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறது ஒவ்வொரு மாத பெளர்ணமியும் முக்கிய விரத நாளாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதிலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியும் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும். இவற்றில் தை மாத பெளர்ணமி தை பூசமாகவும், வைகாசி மாத பெளர்ணமி வைகாசி விசாகமாகவும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரமாகவும், கார்த்திகை […]

You May Like