மக்களே..‌! ஆதார் – வாக்காளர் அட்டை இணைக்க 2024 மார்ச் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…! எப்படி இணைப்பது…?

ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி நிலையங்களில்‌ தங்களுடைய ஆதார்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பதிவு எண்‌ விவரங்களை படிவம்‌ 6B -யில்‌ பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்.

Vignesh

Next Post

மீண்டும் சுங்கக்‌ கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு...! ஏப்ரல் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு...!

Thu Mar 23 , 2023
சுங்கக்‌ கட்டணத்தை வருடந்தோறும்‌ உயர்த்‌தி வரும்‌ மத்திய அரசைக்‌ கண்டித்து வருகின்ற 01.04.2023 அன்று, காலை 11.00 மணிக்கு தமிழகத்தில்‌ உள்ள அனைத்து சுங்கச்‌ சாவடிகளிலும்‌ மாபெரும்‌ கண்டன ஆர்பாட்டம்‌ நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நீண்ட காலமாக அதிக அளவிலான அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் […]
1664598342588

You May Like