ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிக்கர் மழையாக பொழிந்த இங்கிலாந்து16 ஓவர்களிலேயே 170 ரன்கள் குவித்து இந்தியா படு தோல்வியடையச் செய்தது.
டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விளையாட்டை தொடங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் அவுட் ஆனதால் ரசிர்களிடையே பீதியை கிளப்பியது. 5 ரன்கள் எடுத்த நிலையில் அவர் வெளியேறினார்.
ரோகித் ஷர்மா 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி தொடக்கத்திலேயே சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு ஊக்கமளித்தார். 4 பவுண்டரிகள் அடித்து அரை சதம் அடித்த விராட் கோலி அடுத்த பந்திலேயே வெளியேறினார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக சூரியகுமார் யாதவ் களம் இறங்கினார். ஆனால் 10 பந்துகளில் 14 ரன்களே அவர் எடுத்தார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 3 ஓவர்களே எஞ்சியிருந்ததால் ஹர்திக் பாண்டியா மரண அடி அடித்தார். அடுத்தடுத்து 2 சிக்சர்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்த ஹர்திக் பாண்டியா 63 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்திக் இன்னும் ரன்கள் குவிப்பார் என நினைத்த நிலையில் அவர் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்த நிலையில் 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹெல்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஒரு விக்கெட்டாவது இழப்பார்களா என்ற இந்தியாவின் பந்துகளை இங்கிலாந்து சிக்சர் சிக்சராக மாற்றியது.
தொடக்கத்தில் இருந்தே வெறித்தனமான ஆட்டத்தை நம்மால் காணமுடிந்தது. எந்த பந்து போட்டாலும் பவுண்டரி, சிக்ஸ் என விளாசு விளாசென விளாசினர். 70 ரன்களை கடந்தும் ஒரு விக்கெட் கூட இந்திய வீரர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அடிலைடு மைதானத்தில் சீறி சீறி பாய்ந்து விளையாடிய இங்கிலாந்து 16 ஓவர் முடிவில் 170 ரன்கள் குவித்தது.. ஜோஸ் பட்லர் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என80 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 4 பவுண்டரிகள் 7 சிக்கர்கள் என 86 ரன்கள் குவித்தார். 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை படு தோல்வி அடையச் செய்துள்ளது இங்கிலாந்து. இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது.