இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் நடந்து வருவதாக இந்திய ராணும் தெரிவித்திருந்தது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டில், கிட்டத்தட்ட ஒரு வருடமாக கண்காணிப்பில் இருந்த 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் மழை மற்றும் மூடுபனி காரணமாக, கடுமையான வானிலைக்கு மத்தியிலும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது..
வானிலை சரியான உடன் இதுகுறித்து சரியான தகவல்கள் தெரியவரும் என்றும், இதுவரை 4 பயங்கரவாதிகள் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜம்மு மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) பீம் சென் துட்டி கூறுகையில் “இந்த மோதல் அதிகாலையில் தொடங்கியது, இன்னும் நடவடிக்கை தொடர்கிறது. என்று தெரிவித்தார்.
அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக நடந்த இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி யாத்திரை முடிவடையும். எனவே, வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் புனித குகைக் கோயிலுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாத்திரைக்கான தயாரிப்பில், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், புதன்கிழமை காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டல் அடிப்படை முகாமில் பாதுகாப்புப் படையினர் கூட்டு மாதிரிப் பயிற்சியை நடத்தினர்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஒரு புல்வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று இந்தியா தெரிவித்தது. இதை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சைபர் கிரைம் காலர் டியூன்-க்கு பாய் பாய்.. மத்திய அரசின் அறிவிப்பால் பயனர்கள் ஹேப்பி..!!