இந்திய அஞ்சல் துறையில் தமிழக வட்டத்தில் 10வது படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய அஞ்சல் துறையில் தமிழக வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி அஞ்சல் துறையில் போஸ்ட்மேன்,மெயில் கார்டு மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் ஆகிய வேலைகளுக்கு காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் நிறைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.


இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியிடத்திற்கான வட்டார மொழியில் புலமை பெற்று இருப்பது அவசியம். அதனுடன் கம்ப்யூட்டரை இயக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 50 ஆகும். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 15,000 வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 6.4.2023 தேதிக்குள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் 20 4 2023 அன்று வெளியிடப்படும். இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 24/4/2023 அன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய indiaposts.gov.in என்ற இணையதளம் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser5

Next Post

குட் நியூஸ்...! ரூ.3,000 இருந்தால் போதும்...! இ-சேவை மையங்களை அமைக்கலாம்...! முழு விவரம் உள்ளே....!

Fri Mar 24 , 2023
இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ‌ இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையானது ‘அனைவருக்கும்‌ இ-சேவை வழங்கும்‌ திட்டத்தின்‌” கீழ்‌ அனைவரும்‌ விண்ணப்பிக்க வலைத்தளம்‌ ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்‌ முகம்‌ இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம்‌ […]
Tn Goverment money e1676622279654

You May Like