அமெரிக்க துணை கவர்னராக இந்திய பெண் வெற்றி.!

அமெரிக்காவில் வசிக்கும் அருணா மில்லர் 6 நவம்பர் 1964 நாள் அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்து, தன்னுடைய ஏழு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு மிசோரி என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இவர் சிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.


அத்துடன் மாண்ட்கோமெரி கவுண்டி பகுதியில் உள்ளூர் போக்குவரத்துத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். தற்போது 58 வயதான அருணா மில்லர் அதிபர் ஜோ பைடனான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவர்.

இத்தகைய நிலையில், அருணா மில்லர் அமெரிக்காவில் இருக்கும் மேரிலாந்த் மாகாணத்தில் நடைந்த கவர்னர் தேர்தலில் துணை கவர்னராக வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், இவரே முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் எனும் பெருமையையும் பெற்று இருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

1newsnationuser5

Next Post

6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..!! சிறையிலிருந்து வெளிவருகிறார் சவுக்கு சங்கர்..!!

Fri Nov 11 , 2022
பிரபல அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்த சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர் சிறையிலேயே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், […]
Savukku Shankar

You May Like