பரபரப்பு..! ஈரான், இஸ்ரேல் போர் உச்சம்… சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து…!

flight 2025 1

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின.


ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இந்த நிலையில் ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின.

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம் கத்தாரில் உள்ளது. வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, சுமார் 8,000 அமெரிக்க குடிமக்கள் அங்கு வசிக்கின்றனர். அதே போல மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் சென்ட்காம் தலைமையகமும் கத்தாரில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: சர்வதேச யோகா தினம் இன்று!. என்னென்ன நன்மைகள்?. தெரிந்துகொள்ள வேண்டியவை இதோ!

Vignesh

Next Post

தாக்குதலை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்; பிறகு போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம்!. ஈரான் அதிரடி அறிவிப்பு!.

Tue Jun 24 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ […]
ayatollah khamenei and trump 014142700 16x9 1

You May Like