ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. டிஜிட்டல் பேங்கிங்கின் வளர்ச்சியால், சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை குறிவைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். இதனால் ஹெச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ போன்ற வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்..
கடந்த சில வாரங்களாக இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து போலியான செய்திகளை அனுப்பி, வாடிக்கையாளர்களீன் கணக்கு விவரங்கள் அல்லது பான் கார்டு தகவலைப் புதுப்பிக்கும்படி கேட்டு, ஒரு இணைப்பை அனுப்புகின்றனர்.. ஆனால் அந்த இணைப்பை கிளிக் செய்வதால் லட்சக்கணக்கில் பணத்தை இழக்க நேரிடுகிறது.. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்-ல் புதிய மோசடி செய்தி பரவி வருகிறது.. அதில் இந்திய அரசாங்கம் மக்களுக்கு இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அனைத்து இந்திய பயனர்களுக்கும் ரூ.239 மதிப்பிலான இலவச ரீசார்ஜை மத்திய அரசு வழங்குவதாக வாட்ஸ்அப் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ரீசார்ஜ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் பயனர்கள் இணைப்பைக் கிளிக் செய்யுமாறும் செய்தி கூறுகிறது. இருப்பினும், பத்திரிகை தகவல் பணியகமான பிஐபி, இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று அறிவித்தது.
பிஐபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ வாட்ஸ்அப் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடியின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களும் 28 நாட்களுக்கு ரூ.239 ரீசார்ஜ் செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது, எனவே இப்போது கிளிக் செய்து உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்யவும்.. நானும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் செய்துவிட்டேன், இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் 28 நாட்கள் இலவச ரீசார்ஜையும் பெறலாம். ஆனால் இந்த தகவல் போலியானது, மத்திய அரசு அதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளது..
எனவே பொதுமக்கள் போலி செய்திகளில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.. அரசின் சலுகைகளை பெற இந்த லிங்குகளை கிளிக் செய்யுங்கள் போன்ற செய்திகள் வந்தால், அந்த இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..