டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவது பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு சரியவில்லை டாலர் மதிப்புதான் உயர்கின்றது என கூறியது பலரை கேலிக்குள்ளாக்கியது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு பற்றி கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் , சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரது கருத்தை பெரும்பாலானவர்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில் ’’ பல வளர்ந்து வரும் சந்தை நாணயங்களை விட இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. என்றார். இந்த கருத்துக்களில் சில துல்லியமான தகவல்கள் இருப்பதாகவே வல்லுநர்கள் பார்க்கின்றனர். 2022ல் அமெரிக்க டாலர் ஏற்றத்தில் உள்ளது. வட்டி விகிதங்களில் உயர்த்தப்பட்டதன் மூலம் டாலர் குறியீட்டு எண் அதன் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 112.89 நிலைகளில் தொடர்ந்து வலுவாக உள்ளது. இது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை இழக்கச் செய்துள்ளது. என சுட்டிக்காட்டி மெக் மோடி என்ற கம்மோடிட்டி , கரன்சி ஆராய்ச்சியாளர் மற்றும் அனாலிசிஸ்ட் பிரபுதாஸ் லில்லாதர் என்பவர் தெரிவித்துள்ளார்.
அதிக பணவீக்கம் காரணமாக மெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி பருந்தாக மாறி செயல்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் டிமாண்ட் – ஐ பொறுத்து அதன் வளர்ச்சி இருப்பதை காட்டுகின்றது. இந்திய ரூபாய் மற்றும் பவுண்டு போன்ற பிற நாணயங்களை விட அமெரிக்க டாலர் முக்கியத்துவம் பெற உதவுகின்றது.
தற்போது அமெரிக்க டாலர் மதிப்பு 2000 ஆண்டுடன் ஒப்பிடும் போது 22 சதவீதம் யெனுக்கு எதிராக உயர்ந்துள்ளது. யூரோவுக்கு எதிராக 13 சதவீதம் அதிகரித்துள்ளது. சந்தை நாணயங்களுக்கு எதிராக 6 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.