இந்தியாவில் இப்படி ஒரு கிராமமா..? நிர்வாணமாக சுற்றும் பெண்கள்..!! உடலுறவுக்கு தடை..!! இன்னும் பல சுவாரஸ்ய தகவல்..!!

இந்தியாவின் சில கிராம பகுதிகள் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமானவை. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன. அப்படி, ஒரு விநோத சம்பவம் குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.


அப்போதைய காலத்தில் இமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ள பினி என்ற கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்துச் சென்று விடுமாம். ஆனால், அந்த பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியதாக கூறப்படுகிறது. அந்த தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராம பெண்கள் ஆடைகள் அணிவதில்லை. இந்த பழக்க வழக்கங்கள் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் வாலிப பெண்கள் ஒற்றை ஆடை உடுத்திக்கொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வயது முதிர்ந்தவர்கள் நிர்வாணமாகவே இருக்கின்றனர். இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே துர்சம்பவங்களை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீறுவதில்லை. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்தின் இந்த 5 நாட்களில் ஆண்கள் யாரும் மது மற்றும் மாமிசம் உண்ணக்கூடாது. சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால், தெய்வங்கள் கோபமடைந்து அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஐதீகம். அதே போல இந்த 5 நாட்களும் கணவன்-மனைவி தள்ளி இருக்க வேண்டும் என்றும் சிரித்து பேசக்கூடாது என்றும் கூறுகின்றனர். சிரித்து, மகிழ்ந்து இருப்பதைப் பார்த்தால் மீண்டும் பேய் வந்து பெண்ணை தூக்கிச் சென்றுவிடும் என்று அந்த கிராம மக்கள் நம்பி வருகின்றனர். இந்த கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியாது. இவர்களின் இந்த சிறப்பு விழாவில் வெளியூர் மக்கள் பங்கேற்க முடியாது.

CHELLA

Next Post

திருச்சியில் அதிர்ச்சி - திருமணமாகி 1 ஆண்டுகள் கழித்தும் வரதட்சனை கொடுமை!

Sun Feb 12 , 2023
திருச்சி மாவட்டம்  துறையூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய வழக்கில் அப்பெண்  கொடுத்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் விஜயநகர் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது காயத்ரிக்கு வரதட்சணையாக ரொக்கம், நகை.சீர்வரிசை என  எந்த குறையும் வைக்காமல் சீரும் […]
WhatsApp Image 2023 02 12 at 5.53.26 PM

You May Like