சமையறையில் உள்ள ஃபேன் ரொம்ப எண்ணெய் கறையா இருக்கா?. கிளீன் செய்ய ஈஸி டிப்ஸ் இதோ!

Exhaust Fan oily

சமையலறை புகையை தவிர்க்கவும், அனல் காற்றை வெளியேற்றவும் சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது இல்லாத சமையலறையையும் பார்ப்பது அரிது. சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாவிட்டால் சமைப்பது மிக


வும் கடினம். ஏனெனில் இது சமைக்கும்போது உண்டாகும் புகையை வெளியிட உதவுகிறது. ஆனால் நாளாக ஆக சமையலறை எண்ணெய் பிசுக்கு, தூசி ஆகியவை ஃபேனில் ஒட்டிக்கொள்ளும். இதனால் ஃபேன் ஒழுங்காக சுற்றாது. அவ்வாறு சுற்றினாலும் சரியான முறையில் புகையை வெளியேற்றாது.

காரணம் எண்ணெய் பிசுக்கு முழுவதும் ஃபேனில் ஒட்டி அடைத்துக்கொண்டிருக்கும். இதை சுத்தம் செய்வதும் பெரும்பாலோருக்கு கடினமாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு எளிதில் போகாது. எக்ஸாஸ்ட் ஃபேனில் வடிகட்டிகள் இருந்தால், அவற்றை அகற்றிவிட்டு கொதிக்கும் நீரில் ஊற வைக்கவும். இந்த வடிகட்டிகளை சூடான நீர் மற்றும் அம்மோனியா 1/2 கப் கலந்து அந்த நீரில் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின் அதே கரைசலின் தண்ணீரை பயன்படுத்தி நன்கு தேய்க்கவும். ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்ய சோடியம் பாஸ்பேட்டை ஒரு கிளீனராக பயன்படுத்தலாம்.

ஃபேன் பிளேடுகளை சோப்பு மற்றும் தண்ணீர் கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். 1/4 கப் அம்மோனியா, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா ஆகியவற்றை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஊற வைக்கலாம். பிளேடை சுத்தம் செய்யும் போது ரப்பர் கையுறைகளை அணிய வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் பிளேடுகளை சுத்தம் செய்ய பருத்தி துணியைப் பயன்படுத்தவும்.

ஒட்டும் எண்ணெய்களை அகற்ற காஸ்டிக் இரசாயனங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு, எஞ்சிய அழுக்குகளை கழுவ சூடான நீரைப் பயன்படுத்தி கழுவ கறை எளிதில் நீங்கும். ஒரு சிறிய நீராவி கிளீனரைப் பயன்படுத்தி ஒட்டும் எண்ணெய் மற்றும் கிரீஸை அகற்றலாம். இதற்கு, மிகவும் ஈரமான துணி அல்லது துண்டு எடுத்துக்கொள்ளவும். இப்போது விசிறி உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய வேண்டும்.

வினிகர் அல்லது சோப்பு ஆயில், க்ளீனர் சொல்யூஷன்கள், பேஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தியும் ஃபேனை நன்கு தேய்த்து சுத்தம் செய்யலாம். இது மின்விசிறியில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்கு மற்றும் கிரீஸை நீக்கும்.

Readmore: முதலில் உடலுறவு.. பிறகு திருமணம்.. வினோத வழக்கம் கொண்ட பழங்குடி கிராமம்..!! இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா..?

KOKILA

Next Post

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் மாற்றம்...! மாவட்ட ஆட்சியர்கள் பறந்த உத்தரவு...!

Mon Jun 2 , 2025
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் – சாம்பார் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி […]
Food School 2025

You May Like