நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா..? படுக்கைக்கு அழைத்த டைரக்டர்..!! ஓபன் டாக்..!!

திரையுலகில் பல பெண் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில், 2006ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு மிகச்சிறந்த இயக்குனராகவும் திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார். இவர் தமிழ் திரைப்படத் துறையில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர். ஆரம்ப காலத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், மேலாளராகவும் பணி புரிந்து வந்தார். இதையடுத்து, திரைப்படத் துறையில் தடம் பதிப்பதற்கு முன்பே ஓமனில் மஸ்கட் நகரில் இவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி இருக்கிறார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 2006இல் சக்கரமுத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து, 2008இல் கரு பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் சினேகாவின் தாயாராக நடித்த அசத்தினார். இது தான் இவரின் முதல் தமிழ் திரைப்படம். மேலும் பொய் சொல்லப் போகிறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்த இவர், 2009இல் திரு திரு திரு, ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் ஆகிய திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்களில் நடித்தார்

திரைப்படங்களோடு நின்று விடாத இவரது பயணம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்துள்ளது. இதனை அடுத்து இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 எபிசோடுகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2012இல் ஆரோகணம் என்ற படத்தை இயக்கிய இவர் பல பேர் பாராட்டுகளை பெற்றார். இந்த படம் 7 விஜய் விருதுகள் சிறப்பு விருதை வென்றது. மேலும், நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவரை பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த டைரக்டர் மலையாள திரை உலகை சேர்ந்தவர் என்றும், இவர் மலையாள திரைப்படத்தில் நடித்த போது தன்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட்க்கு மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, அந்த டைரக்டர் பல்வேறு நெருக்கடிகளை நடிக்கக்கூடிய சமயத்தில் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

எனினும் அந்த டைரக்டரின் மாயவளையில் சிக்காமல் தைரியமாக தப்பித்து இருக்கக்கூடிய இவர், இந்த விஷயத்தை ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சொல்வதெல்லாம் உண்மை தொடரை 1500 எபிசோடுகளுக்கு மேல் இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலையா? என்று வாய் அடைத்துப் போய்விட்டார்கள். மேலும், தற்போது இந்த விஷயம் வைரலாக இணையங்களில் பேசப்பட்டு வருவதோடு கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Read More : தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்..!! எம்ஜிஆரின் வலது கரம்..!! ஆர்.எம்.வீரப்பன் காலமானார்..!!

Chella

Next Post

தனது தாய்க்காக கோயில் கட்டிய நடிகர் விஜய்..!! அதுவும் சென்னையில்..!! எங்கு தெரியுமா..?

Tue Apr 9 , 2024
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தனது தாய் ஷோபா சந்திரசேகரனுக்காக சாய் பாபா கோவில் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார். அந்த மாதமே விஜய், சென்னை கொரட்டூர் பகுதியில் சாய் பாபா கோவிலை கட்டியிருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், […]

You May Like