தனது தாய்க்காக கோயில் கட்டிய நடிகர் விஜய்..!! அதுவும் சென்னையில்..!! எங்கு தெரியுமா..?

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தனது தாய் ஷோபா சந்திரசேகரனுக்காக சாய் பாபா கோவில் கட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் அறிவித்தார். அந்த மாதமே விஜய், சென்னை கொரட்டூர் பகுதியில் சாய் பாபா கோவிலை கட்டியிருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதி இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய், அவரது தாயார் ஷோபா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. முதலில் இப்புகைப்படம் ஷீரடியில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. கொரட்டூரில் சுமார் 8 கிரவுண்ட் நிலப்பரப்பில் தனது தாய் ஷோபாவுக்காக இந்த கோயிலை விஜய் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா..? படுக்கைக்கு அழைத்த டைரக்டர்..!! ஓபன் டாக்..!!

Chella

Next Post

சந்தன மரத்தை விற்றது என் தந்தை என்றால் அதை வாங்கியது யார்..? வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கம்..!!

Tue Apr 9 , 2024
“நான் நல்ல சூழ்நிலையில் வளர்ந்தது போல, எனது தந்தையும் வளர்ந்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார்” என்று வீரப்பன் மகள் வித்யாராணி உருக்கமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் தளத்தில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும், மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களிடையே வாக்கு சேகரித்து […]

You May Like