விஷாலுக்கு காய்ச்சல் வர அந்த பக்கவிளைவுதான் காரணம்!. ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய சுச்சி!.

vishal suchithra 11zon

அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி.


ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் சேர்ந்து மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலை பாடினார் சுச்சி. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் பாடினார் சுச்சி. அதுமட்டுமின்றி கந்தசாமி படத்தில் ஸ்ரேயாவுக்கு டப்பிங் கொடுத்ததும் சுசித்ரா தான். இப்படி ஆர்.ஜே.வாக மட்டுமின்றி பாடகியாகவும் உச்சத்தில் இருந்தார் சுசித்ரா. இதுதவிர ஸ்டேஜ் ஷோக்களையும் பண்ணியுள்ளார் சுசித்ரா, அதற்காக ஒரு ஷோவுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

இப்படி உச்சத்தில் இருந்த சுசித்ராவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது சுச்சி லீக்ஸ். 4 லட்சம் பாலோவர்களை கொண்ட அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கோலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கசியவிடப்பட்டன. இதனால் சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அவர் பின் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார். பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டார். மீண்டும் ஆர்.ஜே.வாக பணியாற்ற தொடங்கி சாத்தான்குளம் விவகாரம் பற்றியும் ஆங்கிலத்தில் இவர் பேசி வெளியிட்ட வீடியோ மிகவும் வைரல் ஆனது.

சுச்சி லீக்ஸ் மூலம் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, அனுயா போன்ற திரைப்பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க வைத்தன. பின்னர் கணவர் கார்த்திக் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுச்சி. அதுவும் சமீப கலமாக அவர் அளிக்கும் பேட்டிகளில் விஜய் தொடங்கி திரிஷா, கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களை பற்றி பல்வேறு அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுவும் கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் தாம்புல தட்டில் வைத்து போதைப்பொருள் பரிமாறப்பட்டதாக கூறி இருந்தார் சுச்சி.

இந்தநிலையில் தமிழ் தரையுலகில் தற்போது, போதைப்பொருள் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல நடிகர்கள் வலையில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பாடகி சுச்சிதா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஒருகாலத்தில் சுச்சித்ராவும் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றெல்லாம் பல விஷயங்கள் உலா வந்தன. இதை பற்றி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் தெளிவுப்படுத்தியிருக்கிறார். முதன் முதலில் சுசித்ரா மீது கேஸ் கொடுத்தது திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன்தானாம்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் , கார்த்திக்குமார், விஜய்ஜேசுதாஸ் என ஒரு நான்கு பேர் சேர்ந்துதான் சுசி லீக்ஸை வெளியிட்டார்களாம். அது சுசித்ராவுக்கே தெரியாதாம். இதோடு அவர் போதை பொருளுக்கு அடிமையானார் என்று கேஸ் கொடுத்ததும் போலீஸ் அவருடைய வீட்டிற்கு வந்துவிட்டார்களாம். எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எல்லாவற்றையும் போலீஸ் கையகப்படுத்திவிட்டார்களாம். நல்ல வேளையாக லேண்ட் லைன் போன் மட்டும் உபயோகத்தில் இருந்ததாம்.

அப்போது சன் டிவியில் இருந்து சுசித்ராவை தொடர்பு கொண்டு பேசிய போது ‘ நான் செய்யவில்லை’ என்ற ஒரு ஸ்டேட்மெண்ட்டை மட்டும் தன்னால் கொடுக்க முடிந்தது என்று சுசித்ரா கூறினார். மேலும் இதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் நிறைய பேர் கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னதும் ஆதாரம் இருக்கிறதா என்று சுசித்ராவிடம் பல பேர் கேட்டார்கள். ஆனால் அது முட்டாள்தனமான கேள்வி. ஆதாரம் இருக்கப் போய்தான் இவ்வளவு வெளிப்படையாக சொல்கிறேன். ஆதாரம் என்பது ஒரு வேளை நான் இக்கட்டான சூழ் நிலையில் மாட்டிக் கொண்டால் நீதிமன்றத்தில் இதை காட்டி நான் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் வைத்திருப்பேன்.

இதை போய் எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை என்று சுசித்ரா கூறினார். அதன் பிறகு போலீஸ் என்னிடம் ‘வீட்டில் ஏதும் பொருள் இருக்கா? இருந்தால் கொஞ்சம் அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ரெய்டு வருகிறது’ என்று சொன்னார்களாம். எந்த போலீஸாவது இப்படி சொல்வார்களா? உடனே நான் ‘என் வீட்டில் அப்படி எதுவும் கிடையாது. சிகரெட் பிடிப்பேன். அதனால் சிகரெட் பாக்கெட்கள் இருக்கும்’ என்று சுசித்ரா சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு சுசித்ரா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதும் சுசித்ரா ‘என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன் பாருங்க’ என சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் தனுஷ் கார்த்திக் குமார் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் சுசித்ரா கூறினார். மேலும் நடிகர்கள் ஒரு போதையில் இருந்தால் இந்த ரசிகர்கள் ஸ்டார் போதையில் இருக்கிறார்கள். நடிகர்கள் என்ன சொன்னாலும் அதை ரசிகர்கள் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

விஷாலுக்கு வந்தது வெறும் ஜுரம்தான். வேறு ஒன்னுமில்லை. அதான் அவரால் பேசமுடியவில்லை. கை நடுங்குகிறது. கீழே விழுகிறார். சின்னக் குழந்தைகளுக்கு ஜுரம் வந்தாலே போய் பரீட்சை எழுதி விட்டு வருகிறார்கள். இவர்கள் ஜுரம்னு சொல்வாங்களாம். அதை ஆடியன்ஸும் நம்புகிறார்கள். இதெல்லாம் அதோட பக்கவிளைவுதான் காரணம் என சுசித்ரா கூறினார்.

Readmore: ஸ்ரீகாந்த் பலியாடுதான்!. மெயின் வில்லன் இந்த நடிகர்தான்!. மிகப்பெரிய நெட்வொர்க்கே இருக்காம்!. போட்டு உடைத்த பாடகி சுசித்ரா!.

KOKILA

Next Post

பெரும் சோகம்!. மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழை!. ஹோட்டல் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 9 தொழிலாளர்களை காணவில்லை!.

Sun Jun 29 , 2025
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் […]
Cloudburst Uttarakhand 11zon

You May Like