ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ட்ரம்பின் இந்த கூற்றை ஈரான் முதலில் மறுத்தது. பின்னர் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு அமலுக்கு வந்ததாக ஈரானின் அரசு ஊடகம் அறிவித்தது.
இதையடுத்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , ஈரானுடன் ஒரு போர் நிறுத்தத்திற்கு தனது நாடு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல் தனது நாட்டிற்கு எதிரான போர் இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் கூறினார். போர் நிறுத்த திட்டத்தை முன்வைத்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஈரானும் இஸ்ரேலும் ஒரு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சிறிது நேரத்திலேயே, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ஈரான் “சரணடையும் நாடு அல்ல” என்று கூறினார்.
இதனிடையே ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலின் அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், அணுசக்தி பணியைத் தொடர முயன்றால், தெஹ்ரானைத் தொடர்ந்து தாக்குவோம் என்று கூறினார். மேலும் “போர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர்கள் [ஈரான்] தங்கள் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்கள் இரண்டிலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறார்கள், மேலும் அவர்கள் திட்டத்தை மீண்டும் தொடங்குவார்கள் என்று நான் நம்பவில்லை, ஏனெனில் அது அமெரிக்காவை எதிர்கொள்ளும். அவர்கள் மீண்டும் தொடங்க முயற்சித்தாலும், நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்…” என்று கூறினார்.
இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தங்கள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட பல ஈரானிய ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவற்றை இடைமறிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறியது. மேலும் ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு “வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது..
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் “ஈரானின் போர் நிறுத்த மீறலுக்கு எதிராக, தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகளுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவதன் மூலம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு வலுவாக பதிலளிக்க நான் அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.
ஆனால் இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைகளை ஏவவில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
Read More : “போர் நிறுத்தம் அமலில் இருக்கு.. அதை மீறாதீங்க..” ஈரானின் தாக்குதலுக்கு பிறகு டிரம்ப் கருத்து..