திருக்குறள் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும் ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனனம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும். எனவே, 1330 திருக்குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வவங்களுக்கு தலா ரூ.10,000/-ம் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் . தற்போது இந்த பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.