2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான் என பேசினார். திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்ட விரும்புகிறோம் என்று கூறி வந்தார். இந்த சூழலில் திருமாவளவன் – வைகை செல்வன் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் 2026 தேர்தலில் விசிகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என இபிஎஸ் தூது விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் விசிக தேர்தல் செலவை அதிமுக ஏற்கும் என இபிஎஸ் கூறியதாக அவர் சொன்னதாகவும், இதற்கு திருமாவளவன் பதிலளிக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. திமுக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட திருமாவளவன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அதிமுக நிர்வாகியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
Read more: மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு உத்தரவு..!!