“ பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம்..” ஈரான் அதிபர் திட்டவட்டம்..

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் சட்டமாக உள்ளது என்று அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.

ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலிஸாரின் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது.. இதை தொடர்ந்து பெண்கள் பலரும் ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.. இதனால் பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியை கடுமையாக ஒடுக்கினர்.


இந்நிலையில் ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத் அருகே உள்ள ஒரு நகரத்தில் ஹிஜாப் அணியாத இரு பெண்களின் தலையில், ஒரு நபர் தயிரை ஊற்றி உள்ளார்.. இந்நிலையில் நீதித்துறை அதிகாரிகள், அந்த நபருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தனர். மேலும் ஈரானின் கடுமையான பெண் ஆடை விதிகளை மீறியதற்காக சம்மந்தப்பட்ட பெண்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் கட்டாய ஆடைக் குறியீட்டை மீறியதற்காக பெண்கள் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மால்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் ஹிஜாப் அணியாத பெண்கள் இன்னும் பரவலாகக் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிஅரசு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ஈரானில் ஹிபாஜ் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார்.. மேலும் பேசிய அவர் “சிலர் (ஹிஜாப் மீது) நம்பிக்கை இல்லை என்று சொன்னால்… ஹிஜாப் அணிவதை கட்டாயப்படுத்துவது நல்லது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹிஜாப் இன்று சட்டப்பூர்வமான விஷயமாக உள்ளது.” என்று தெரிவித்தார்..

இதனிடையே ஹிஜாப் என்பது தேசத்தின் நாகரீக அடித்தளங்களில் ஒன்று என்றும், நாட்டின் நடைமுறைக் கோட்பாடுகளில் ஒன்று என்றும் ஈரான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றும், அதிலிருந்து பின்வாங்கவோ அல்லது சகிப்புத்தன்மையோ இருக்காது என்று தெரிவித்துள்ளது.. ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ், பெண்கள் தங்கள் தலையை ஹிஜாப் கொண்டு மறைக்க வேண்டும்.. தங்கள் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கோவையில் இரு வேறு இடங்களில் இருவர் படுகொலை…..! தம்பதிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது…..!

Sun Apr 2 , 2023
கோவை ஆர் ஜி புதூரை சேர்ந்தவர் புவனேஸ்வர்(19). தனியார் கல்லூரி மாணவரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு இடையே முன்னுவிரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய நண்பர்கள் நேற்று முன்தினம் சின்னியம்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்களுக்கும், புவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் புவனேஸ்வரன் உயிரிழந்தார். அவருடைய நண்பர் சந்தோஷ் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார் இந்த […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like