பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வரிப் பகிர்வு ரூ. 4144 கோடி விடுவிப்பு…!

Central 2025

பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வாக ரூ. 4144 கோடி விடுக்கப்பட்டுள்ளது.


வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள், மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், வளர்ச்சி/மக்கள் நலன் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு 2025 அக்டோபர் 10 அன்று விடுவிக்க வேண்டிய வழக்கமான மாதாந்தரப் பகிர்வுடன் 2025, அக்டோபர் 1 அன்று ரூ. 1,01,603 கோடியை மாநில அரசுகளுக்கு கூடுதல் வரிப் பகிர்வாக விடுவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ. 4144 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பத் துறை, இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட் மற்றும் எஸ்பிவி இந்தியா கூட்டமைப்பு 2025-26 முதல் 2030-31 வரை, கூடுதலாக அடுத்த ஆண்டுகள் வரையிலும், (2031-32 முதல் 2037-38 வரை) அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதற்காக, மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

திறன்கள் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளுடன் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்தின் மூன்றாம் கட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், அதிநவீன உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான உயர்மட்ட அறிவியல் திறமைகளை மேம்படுத்துவதுடன், மொழிபெயர்ப்பு கண்டுபிடிப்புகளுக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இது உயர்தர ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளை வலுப்படுத்தும். மேலும் அறிவியல் திறனில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, உலகத் தரம் வாய்ந்த உயிரி மருத்துவ ஆராய்ச்சி திறனை உருவாக்க உதவிடும்.

அடிப்படை, மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்தில் தொடக்ககால, தொழில் மற்றும் இடைநிலை ஆராய்ச்சி படிப்புகள். இவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சி நிலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கூட்டு மானியத் திட்டம். இதில் இந்தியாவில் வலுவான ஆராய்ச்சிப் பதிவுகளைக் கொண்ட தொடக்க மற்றும் நடுத்தர மூத்த தொழில் ஆராய்ச்சியாளர்களுக்கான 2-3 புலனாய்வாளர் குழுக்களுக்களின் தொழில் மேம்பாட்டு மானியங்கள் மற்றும் வினையூக்கி கூட்டு மானியங்கள் அடங்கும். முக்கிய ஆராய்ச்சி முயற்சிகளை வலுப்படுத்த ஆராய்ச்சி மேலாண்மைத் திட்டம். மூன்றாம் கட்ட திட்டம், வழிகாட்டுதல், நெட்வொர்க்கிங், பொது ஈடுபாடு,புதுமையான தேசிய மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.

Vignesh

Next Post

மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறை... தமிழக மின்வாரியத் தலைவர் சூப்பர் தகவல்...!

Fri Oct 3 , 2025
மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையைத் தொடங்குவதற்கான பணிகளை மத்திய அரசுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல். மேலும் தமிழகத்தில் விரைவில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் ( TNPDCL ) மாதாந்திரக் கட்டண முறையை அமல்படுத்த ஸ்மார்ட் […]
Govt Eb bill 2025

You May Like