குடும்பப்பெயரையே மாற்றி சிறுநீரக மோசடி..!

ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, சிறுநீரகக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதில் அப்பெண்ணின் குடும்பப் பெயரை மாற்றி அவரின் சிறுநீரகத்தை சூறையாடியுள்ளது அந்தக் கும்பல். அதன்படி முதலில் பெண்ணின் ஆதார் அட்டையில் உள்ள குடும்பப் பெயர், சிறுநீரகம் வாங்குபவரின் மனைவி என மாற்றப்பட்டுள்ளது. அதன்படி சிறுநீரகம் தேவைப்படும் அந்த ஆணின் மனைவியாக இவரின் ஆதார் அட்டையை உருவாக்கிய அவர்கள், சிறுநீரகத்திற்கு முதலில் ரூ.7 லட்சம் தருவதாகக் கூறி பேரம் பேசியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தை எடுத்த அவர்கள், பின்னர் ஐந்து லட்சம் மட்டும் கொடுத்தாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டுகிறார். மேலும், தனது மருத்துவச் செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அந்தப் பெண் சொல்கிறார். இதையடுத்து மீதிப் பணத்தைத் தருமாறு கேட்டபோது, தம்மைக் கஷ்டப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர் என்று அந்தப் பெண் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

1newsnationuser1

Next Post

ஆதார் - பான் இணைக்க வெறும் 5 நிமிடத்தில் இணைக்கும் ஈசியான வழி

Fri Jun 30 , 2023
மத்திய அரசு மக்களுக்கு தங்களுடைய பான் மற்றும் ஆதார் எண் இணைக்க பல முறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி நாள். இதுவரையில் மத்திய அரசு காலநீட்டிப்புக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை, எனவை இன்றைய நாள் முடிவிற்குள் பான் ஆதார் இணைத்திடுங்கள். பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைக்காதவர்கள் இன்றே இப்பணியை முடிக்க வேண்டியது கட்டாயம். ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 […]

You May Like