தமிழகத்தில் நில அளவர், மற்றும் வரவையாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நில அளவர் மற்றும் வரவையாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் சென்ற பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட சூழ்நிலையில், இந்த பதவிக்கான 2வது கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு உள்ளிட்டவை சென்னை பாரிமுனையில் இருக்கின்ற தேர்வாணைய அலுவலகத்தில் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது