SIDHU MOOSEWALA| இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர்.!

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின்(SIDHU MOOSEWALA) பெற்றோருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாடகர் சித்து மூஸ் வாலா அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2022 ஆம் வருடம் மே மாதம் 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபி பாடகர் சுப்தீப் சிங் சித்து என்ற சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுர் விரைவில் குழந்தைய பெற இருக்கிறார் என்று ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மறைந்த பாடகரின் தாயார் சரண் 58 வயதுடையவர் என்றும், சித்துவின் தந்தைக்கு 60 வயது என்றும் கூறப்படுகிறது.

சித்து மூஸ் வாலா அவரது பெற்றோருக்கு ஒரே மகன். குழந்தை பிறக்க இருப்பது பற்றி அவரது பெற்றோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் விரைவில் பிரசவம் நடக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

2022 மே 29 அன்று, மான்சா மாவட்டத்தின் ஜவஹர்கே கிராமத்தில், மூஸ் வாலா 28 வயதில் அவரது காரில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
சித்து மூஸ் வாலா தனது இசை மற்றும் பாடலின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். அவரது மரணம் அதிர்ச்சிகரமாக இருந்த போதிலும் அவர் இசையமைத்த பல பாடல்கள் அவரது மரணத்திற்குப் பின் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

2017 ஆம் ஆண்டில், சித்து மூஸ் வாலா தனது முதல் பாடலான ‘ஜி வேகன்’ மூலம் இசைத்துறையில் அறிமுகமானார், மேலும் வெற்றிகரமான ஆல்பங்களின் மூலம் விரைவில் பிரபலமடைந்தார். ‘லெஜண்ட்’, ‘சோ ஹை’, ‘295’ மற்றும் ‘தி லாஸ்ட் ரைடு’ போன்ற தரவரிசையில் முதலிடத்தை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English Summary: As per the sources Late Singer Sidhu Moose Wala’s Parents expecting their second child.

Read More: Lok Sabha | காங்கிரஸில் இருந்து அதிரடி விலகல்..!! பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி..!!:

Next Post

PM Modi | ’என் மண் என் மக்கள்’ யாத்திரை..!! தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!

Tue Feb 27 , 2024
கேரள மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், பாடி ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் மலர் கோத்து […]

You May Like