Lok Sabha | காங்கிரஸில் இருந்து அதிரடி விலகல்..!! பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lok Sabha | நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அரசியல் கட்சியினர் பலர் கட்சித்தாவலில் ஈடுபடுவது தொடர் கதையாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பாட்டீல் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். மேலும், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary : Ex-Maharashtra Minister Basavaraj Patil Quits

Read More : Lok Sabha தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி..? சின்னம் இதுதான்..!! திருமாவளவன் பரபரப்பு பதில்..!!

Chella

Next Post

SIDHU MOOSEWALA| இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர்.!

Tue Feb 27 , 2024
மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின்(SIDHU MOOSEWALA) பெற்றோருக்கு குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாடகர் சித்து மூஸ் வாலா அவரது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2022 ஆம் வருடம் மே மாதம் 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபி பாடகர் சுப்தீப் சிங் சித்து என்ற சித்து மூஸ் வாலாவின் பெற்றோர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக செய்திகள் […]

You May Like