நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து சத்தீஷ்கர் மாநிலத்தின் இன்ஸ்டாகிராம் பிரபலமான லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி 22 வயதான இவர், பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டின் மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லீனாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.