தமிழக அரசின் மக்கள் ஐடிக்கும் ஆதார் அட்டைக்கும் உள்ள சில வேறுபாடுகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆதாருக்கு இணையாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் பன்னிரெண்டு இலக்க எண்ணுடன், மக்கள் ஐடி என்ற அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் அடையாள 12 இலக்க எண்ணை அரசு ஒதுக்கி பராமரிக்கும். இதன் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.

மக்கள் ஐடி
மக்கள் ஐடியில் அடையாள அட்டை போன்று எதுவும் வழங்கப்படாது. கைரேகை, கருவிழி போன்ற பயோ மெட்ரிக் பதிவு செய்யப்படாது. தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் பயனர்களைக் கண்டறிந்து, அது தொடர்பான தரவுகள் மக்கள் ஐடியுடன் இணைக்கப்படும். அடையாள எண் மட்டுமே உருவாக்கப்படும்.
இரு துறைகளுக்கு இடையே தரவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும். மக்கள் ஐடி சேவையை தனிநபர் கணினி மூலம் Login செய்து பெற முடியாது. இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆதார்
ஆனால் ஆதார் அனைத்து மக்களுக்கும் ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். அரசுத் திட்டங்கள், வங்கி பயன்பாடு போன்றவற்றுக்கு அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும். ஆதார் அட்டைக்கு பயோமெட்ரிக் பதிவிலான கை ரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும், புகைப்படம் தேவைப்படும். ஆதார் அட்டை சில சேவைகளுடன் இணைக்கப்படும்.