உயிருக்கு உளைவைக்கும் ஃபேஸ் க்ரீம்கள் – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

நம் சருமத்தை மெருகேற்ற பலவகையான அழகு சாதனப்பொருட்களை நாம் அதிகளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த அழகு சாதனப்பொருட்கள் நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகின்றது.

சன்ஸ்க்ரீன், ஸ்கின் க்ரீம், ஃபவுண்டேஷன், மாய்ஸ்ரைசர் எனப் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வு இந்த அழகு சாதனப் பொருட்களின் பின்னால் உள்ள ஆபத்தை வெளிப்படுத்துகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் செயற்கையான முறையில் பல்வேறு வேதிப்பொருட்களால் தான் தயாரிக்க படுகிறது. இந்த சரும கிரீம்களை அதிகமாக பயன்படுத்துவதால், சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த கிரீம்களில் பாதரசம் அதிகம். இது தோல் மூலம் உடலில் உள்ள பாகங்களுக்கு ஊடுருவ சாத்தியம் ஆகிறது. இது சிறுநீரகத்தை சேதப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சிறுநீரகத்தை பாதிக்கும் சவ்வு நெப்ரோபதியும் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.சவ்வு நெஃப்ரோபதி ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதனால் சிறுநீரகங்கள் செயலிழந்து, சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறுகிறது. சவ்வு நெப்ரோபதியால் பாதிக்கப்பட்ட 22 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களில் 15 பேர் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 13 பேர் தோல் அழகுக்கான கிரீம்களைப் பயன்படுத்திய பின்னரே அறிகுறிகளை உருவாக்கினர்.இதே நிலை நீடித்தால், பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு ஆபத்துகளும் அழகு சாதனப் பொருட்களில் மறைந்திருப்பதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிட்னி இன்டர்நேஷனல் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக அளவு பாதரசம் கொண்ட தோல் ஃபேர்னஸ் க்ரீம்களின் பயன்பாடு அதிகரிப்பது சவ்வு நெஃப்ரோபதி (எம்என்) நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இந்தியாவில் ஸ்கின் ஃபேர்னஸ் க்ரீம்களின் பரவலான பயன்பாடு சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது இந்த கிரீம்களில் பாதரசம் அதிகமாக உள்ளது, இது சிறுநீரக பிரச்சனைகளுக்கு ஒரு மௌனமான காரணம் என்று அறிக்கை கூறுகிறது.இது தோல் மற்றும் சிறுநீரக ஆரோக்கிய பிரச்சனை மட்டுமல்ல.. பொது சுகாதார நெருக்கடி என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பாதரசத்தை சருமத்தில் தடவினால் அது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் உள்ள கட்டுப்பாடற்ற விளம்பர சந்தையே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம். மக்கள் மத்தியில் விளம்பர படங்களில் தோன்றும் மாயங்களை நம்பி உடனே அழகாக முடியும் என்று நம்புகின்றனர்.

இவைகளை பயன்படுத்தி கொள்ளும் போது தான் தங்களது சருமத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் உருவாகி இருக்கிறது. மக்களும் இயற்கை முறையில் கிடைக்கும் பல பொருட்களை பயன்படுத்தி கொள்ளும் முயற்சி குறைந்து விட்டது. தயார் நிலையில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Read More: ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Baskar

Next Post

குட் நியூஸ்...! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் கன்பார்ம்...!

Wed Apr 24 , 2024
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து பயணிகளும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறலாம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தினமும் லட்சக்கணக்கான இந்தியர்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். ரயிலில் பயணிக்கும் பலர் உறுதியான டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் முன்பதிவு செய்தாலும், […]

You May Like