சென்னை| +2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்…..! போக்சோ சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு……!

சென்னையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்ற நபரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை மீண்டும் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி தாஸ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அந்த மாணவி தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.


சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கின்ற ஹோஸ்கோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். இந்த வழக்கின் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அந்த தீர்ப்பில் விசாரணையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவற்றிருப்பதால் குற்றவாளியான தாஸுக்கு சாகும் வரையில் சிறை தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்ற நீதிபதி அபராத தொகையையும் சேர்த்து மொத்தமாக 7,30,000 ரூபாயை அந்த மாணவிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Next Post

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்கள் தேர்வு...! ஊக்கத்தொகை வழங்கப்படும்…!

Tue Jun 20 , 2023
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு […]
போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்புத் திட்டங்கள்..!! முதலீட்டுக்கான சிறந்த வழி..!! இரட்டிப்பாகும் பணம்..!!

You May Like