சென்னையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்ற நபரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை மீண்டும் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி தாஸ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அந்த மாணவி தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கின்ற ஹோஸ்கோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். இந்த வழக்கின் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அந்த தீர்ப்பில் விசாரணையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவற்றிருப்பதால் குற்றவாளியான தாஸுக்கு சாகும் வரையில் சிறை தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கின்ற நீதிபதி அபராத தொகையையும் சேர்த்து மொத்தமாக 7,30,000 ரூபாயை அந்த மாணவிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.