Lok Sabha | சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்..!! எந்த தொகுதியில் போட்டி..? மதிமுக விளக்கம்..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், மதிமுக உடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் பேட்டியளித்தார். அப்போது, ”ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்க வேண்டும் என திமுக-விடம் கேட்டுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தெரிவித்தார். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இம்முறை தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

English Summary : One Lok Sabha seat and one Rajya Sabha seat should be allocated

Read More : TN Police | ஹெல்மெட், சீட் பெல்ட்..!! இனி போலீசார் மீதும் வழக்குப்பதிவு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Chella

Next Post

BJP உடன் கூட்டணி வைத்த த.மா.கா..!! கடுப்பில் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்த முக்கிய புள்ளி..!!

Thu Feb 29 , 2024
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சியில் இருந்து விலகிய தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு ஆலோசனைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சார பணிகள் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், […]

You May Like