TN Police | ஹெல்மெட், சீட் பெல்ட்..!! இனி போலீசார் மீதும் வழக்குப்பதிவு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

ஹெல்மெட் அணியாமலும், காரில் சீட் பெல்ட் அணியாமலும் சென்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இருப்பினும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் போலீசாரும் தலைக்கவசம் அணியாமலும், காவல்துறை வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமலும் செல்கின்றனர். பொதுமக்களுக்கு மட்டும் அபராதம் விதிக்கும் போலீஸார், போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடு‌க்காதது ஏன் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இந்நிலையில், சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல துணை ஆணையர் அனைத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் காவல்துறையின் கார் அல்லது ஜீப்பில் செல்லும் காவல்துறையினரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அப்படி இல்லையென்றால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : A case will be filed against the police

Read More : மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த KPY பாலா..!! கண்ணீர் மல்க நன்றி..!!

Chella

Next Post

Lok Sabha | சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்..!! எந்த தொகுதியில் போட்டி..? மதிமுக விளக்கம்..!!

Thu Feb 29 , 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய […]

You May Like