மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு ஆசை என்னவென்றால் நான் நினைப்பது அனைத்தும் உடனே நிறைவேற வேண்டும் என்ன நினைத்தாலும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் நம்மையும் தாண்டி நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை. நாம் நினைப்பது அனைத்தும் நடந்து விட்டால் என்று கடவுள் எங்கே இருக்கிறார்?
சென்னை புறநகர் பகுதியையும் சென்னையையும் ஒன்றிணைக்க மிக முக்கிய ரயில் வழித்தடமாக தாம்பரம் சென்னை கடற்கரை வழித்தடம் இருந்து வருகின்றது. இந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று சென்னை கடற்கரையிலிருந்து இரவு 8:30 மணி அளவில் தாம்பரம் நோக்கி ஒரு மின்சார ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு காதல் ஜோடி கட்டிப்பிடித்தவாறு ரயில் முன்பு பாய்ந்தது. இதில் அந்த இளம் பெண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே நேரம் காதலன் பலத்த காயங்களுடன் சுயநினைவு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக ரயில் ஓட்டுநர் அந்த ரயிலை நிறுத்தினார். தகவல் இருந்து மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அதன் பிறகு சம்பவம் நடைபெற்றது நேரில் பார்த்த பயணிகளிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
அத்துடன் இருவரின் கைபேசிகளையும் எடுத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இருவரும் ரயில் மூலம் பாய்ந்ததால் அவர்களுடைய கைபேசிகள் நொறுங்கிய நிலையில் இருப்பதால் காவல்துறையினரின் விசாரணை முடங்கி இருக்கிறது.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோ என்று தெரிய வந்திருக்கிறது உயிரிழந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.தொடர்ந்து, உயிரிழந்த காதல் ஜோடி தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.