தப்பித்த அதிமுக முன்னாள் அமைச்சர்…! ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளக் கூடாது என மிரட்டியதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் மற்றும் 4 பேர் மீது புகார் அளித்தார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சேகரும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதாலும், பாலம் அமைக்கக் கூடாது என தொழிலாளர்களை மிரட்டியதோடு, ஜே.சி.பி.யையும் பயன்படுத்தி பணியை முடக்கினார்.

விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் மற்றும் 3 பேர் மீது ஐபிசி 147, 341, 353, மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

மனுதாரர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடுதல் அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது திட்டமிட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்தார். இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்கிறீர்களா? தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் ..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Thu Apr 25 , 2024
உங்கள் முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வதன் மூலம் தோல்புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இப்போதெல்லாம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அருகருகே அழகுநிலையங்கள் வந்துவிட்டன. பெண்கள் தங்கள் முகத்தை மெருகேற்ற அழகு நிலையங்களுக்கு சென்று பல்வேறு ஃபேஷியல்களை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் முகம் நல்ல பளபள என மாற ப்ளீச்சிங்-யை பலரும் விரும்புகின்றனர். இது உடனடியாக முகத்திற்கு தீர்வு கொடுக்கிறது. எந்தளவிற்கு பளபளப்பை […]

You May Like