கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை….! தம்பதிகள் அதிரடி கைது…..!

மதுரை ஆத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த பாண்டிச்சேரி என்பவர் கணவரை தெரிந்து தனியாக வசித்து வருகிறார் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் கரிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலயத்தில் வேலை பார்த்ததால் அந்த பகுதியிலேயே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் அப்போது அவருடைய வீட்டின் அருகே வசித்த கண்ணன் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


கண்ணன் மீது கொலை அடிதடி போன்ற வழக்குகள் இறுதியில் இருக்கின்ற நிலையில் அவர் பாண்டிச்செல்வியிடம் அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு பாலியல் தொந்தரவும் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, ஒரு மாதத்திற்கு முன்னால் அவர் வீட்டை காலி செய்து கொண்டு ஆத்திக்குளத்திற்கு குடி பெயர்ந்து விட்டார்.

கடந்த மே மாதம் 2ம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பாண்டிச்செல்வியை கண்ணன், அவருடைய மனைவி பிரேமா மற்றும் நண்பர்கள் பாலா அருள் மணி காதர் சங்கையா உள்ளிட்டோர் ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர். ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்து 6500 ரொக்க பணம் கைபேசி எடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு அனுப்பிவிட்டனர்.

பின்னர் பாண்டி செல்வி இந்த விவகாரம் தொடர்பாக வழங்கிய புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணன் மற்றும் பிரேமாவை கைது செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

சீர் வழங்காத உறவினரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வாலிபர்…..! மதுரையில் பரிதாபம்…..!

Thu Jun 8 , 2023
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியைச் சேர்ந்த பனையன் (45) மற்றும் அவருடைய உறவினர்களான வீரணன், கருவாமொண்டி உள்ளிட்டோர் கடந்த 3ஆம் தேதி அந்த அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். மது குடித்த பிறகு பனையன் திடீரென்று வாந்தி எடுத்து மயக்கமாக நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி […]
madurai melur

You May Like