மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவனை பன்றி ஒன்று கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கொண்ட மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது தெருவிற்குள் திடீரென நுழைந்த பன்றி ஒன்று சிறுவனை நோக்கி ஓடிவந்து அவனை கீழே தள்ளி கடித்து குதற ஆரம்பித்தது. இதனால் அந்த சிறுவன் வலியால் துடித்தான். அருகிலிருந்த மக்கள் பன்றியின் பிடியிலிருந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் விடாத பன்றி அந்த சிறுவனை கடித்து குதறியது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் பன்றியின் பிடியிலிருந்து சிறுவனை மீட்டனர். உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தற்போது மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகளை யாரோ சமூக வலைதளத்தில் பரப்பியிருக்கின்றனர். அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை மாடு ஒன்று முட்டிய சம்பவத்தை கேள்விப்பட்டிருப்போம். தற்போது சிறுவன் ஒருவனை பன்றி கடித்து குதறியிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.