அதிர்ச்சி…! 39 வயதான பிரபல மலையாள எழுத்தாளர் மாரடைப்பால் காலமானார்…!

பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார்.

கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சமிபத்தில் தலையில் காயம் அடைந்த ஜெயேஷ், மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பாலக்காடு தேங்குறிச்சி அருகே உள்ள அவரது சொந்த ஊரான விளையனூரில் நடைபெற உள்ளது. அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர் ‌‌.

Vignesh

Next Post

நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்..!! தமிழக அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு..!!

Thu Mar 23 , 2023
இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க இன்று தொடங்கியது. பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று இந்தியா முழுவதும் பரவலாக பிறை தெரியாததால், நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர். முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், அவர்கள் இந்த மாதத்தை […]
WhatsApp Image 2023 03 23 at 7.18.07 AM

You May Like