காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றார்…!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வதாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மல்லிகார்ஜுன கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். சோனியா காந்தி , ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாவது இதுவே முதல் முறை முன்னாள் தலைவர் சோனியா காந்தி , புதிதாக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சோனியா காந்தி இது குறித்து கூறுகையில் , கார்கேவுக்கு எனது மனமர்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மாற்றம் , தான் இந்த உலகை ஆளும் சக்தியாக இருக்கின்றது. கடந்த சில காலமாக காங்கிரஸ் கட்சி நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இனி நாம் பிரச்சனைகளை விரைவில் வீழ்த்துவோம் என்பதில் நம்பிக்கை இருக்கின்றது என பேசி உள்ளார் .


Next Post

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர்..!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!!

Wed Oct 26 , 2022
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பூபதி ராஜா (28). டிப்ளமோ முடித்துள்ள இவர், தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதற்கு முன், ஆன்லைன் ரம்மி […]

You May Like