பரபரப்பு! ஹெலிகாப்டரில் கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி..

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டரில் கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், மம்தாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த மாதம் கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் வீட்டில், மம்தா பானர்ஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கினார். மருத்துவமனையில் மம்தாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நெற்றியில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மம்தா வெளியிட்டார். தற்போது அவர் குணமடைந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவதால் உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், அவர் தனது திட்டமிடப்பட்ட பயணத்தைத் தொடர்ந்தார். மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Post

United States | துப்பாக்கி இல்லாமல் என்கவுண்டர்.? 94 பேரை காவு வாங்கிய மயக்க ஊசி.!! பதற வைக்கும் அறிக்கை.!!

Sat Apr 27 , 2024
United States: கடந்த 2021 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த டிமெட்ரியோ ஜாக்சன் என்ற 43 வயது நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் அவரை ஒரு டேசர் மூலம் ஷாக் கொடுத்தனர். அப்போது தன்னால் மூச்சு விட முடியவில்லை என ஜாக்சன் காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பின்பக்கமாக கைகளில் விலங்கிடப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. பின்னர் ஜாக்சனுக்கு பின்புறமாக கை விலங்கிடப்பட்டு மருத்துவர்களின் மூலமாக சக்தி […]

You May Like