திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் நகை முதலிய பொருட்கள் கோவிலுக்கு வெளியே இருக்கின்ற கட்டிடத்தில் எண்ணப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிப்பதற்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் தன்னார்வலர்கள் வங்கி அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்கள் என்று பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், நேற்று காலை காணிக்கை பணத்தை என்னும் பணி நடைபெற்று வந்தது இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் ரவிக்குமார் என்பவர் வேலை முடிந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா மூலமாக அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்து வந்த தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ரவிக்குமார் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் சோதனை நடத்தப்பட்டது அப்போது அவர் தடையை ஆடைகளுக்குள் ரூபாய் 72000 மதிப்பிலான அமெரிக்க டாலர்களை ஒலித்து வைத்து எடுத்துச் செல்ல முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்தை அவரிடம் இருந்து கைப்பற்றிய கண்காணிப்பு அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் வழங்கினர். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த திருமலை திருப்பதி காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்து இருக்கிறார்கள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.