மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சார்ந்தவர் ராஜா வயது 30. இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவியும் ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். உள்ளூரில் கட்டட வேலைக்கு சென்று வந்த ராஜா குடும்பம் நடத்த வருமானம் போதவில்லை. இதன் காரணமாக, வெளியூர் வேலைகளுக்கும் சென்று தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக மனைவி வித்யா திருச்சியில் உள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவருடன் வித்யாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் ராஜாவிற்கு தெரிந்ததும் அவர் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார். மேலும் இந்த கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி மனைவியிடம் எச்சரித்து இருக்கிறார். இது தொடர்பாக லால்குடி காவல் நிலையத்திலும் புகார் செய்திருந்தார் ராஜா. இந்நிலையில் வித்யா திடீரென தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனால் விரக்தி அடைந்த ராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மேல வாளாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நின்று வேகமாகச் சென்ற ரயில் வண்டியின் மீது பாய்ந்து உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதாச்சலம் ரயில்வே போலீசார் தற்கொலை செய்து கொண்ட ராஜாவின் உடல் பாகங்களை சேகரித்து லால்குடி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது.