உத்தரப்பிரதேசம் மாநிலம் கர்ச்சனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஹேவா பகுதியில் தன்னுடைய காதலியை கொலை செய்து அவரது சடலத்தை வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்திருந்ததை கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினர் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
குற்றம் சுமத்தப்பட்ட அரவிந்த் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவருடைய வீட்டிலிருந்து ராஜ் கேசர் (35) என்பவரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்னர் தான் அரவிந்த் தன்னுடைய காதலி ராஜ் கேசரை கொலை செய்து அவரது சடலத்தை தன்னுடைய வீட்டில் உள்ள தொட்டியில் மறைத்து வைத்து விட்டார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி கேசரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் வழங்கியுள்ளனர். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் கேசரின் செல்போனை ஆய்வு செய்து அதில் உள்ள அழைப்பு விவரத்தின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டதில் அரவிந்த் வீட்டில் ராஜ் கேசர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அரவிந்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட போது அவர் ராஜ் கேசரை காதலித்து வந்ததையும், அவரை கொலை செய்து வீட்டில் ஒலித்து வைத்திருப்பதையும் வாக்குமூலமாக வழங்கினார். இதனை தொடர்ந்து, ராஜ் கேசரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக இதுவரையில் விவரம் எதுவும் தெரியவில்லை. வேறு பரிசோதனை அறிக்கை பிறகு தான் கொலையின் தன்மையை பற்றி தெரிவிக்க முடியும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே கொலை செய்த அரவிந்திடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.