ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கொத்தவலசு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவாணி(27) என்ற பெண்மணி இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய கணவரை இவர் பிரிந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் தான் கோபால் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பின்பு கோபாலுடன் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் விசாகப்பட்டினம் ஜகதாம்பா சந்திப்பில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலை பார்த்து வந்த போது தான் கோபால் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அதன் பிறகு சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தான் அந்த பெண்ணுக்கு வெங்கி என்ற வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்து கொண்ட கோபால் அந்தப் பெண்மணியின் மீது மிகுந்த வெறுப்பை காட்டி இருக்கிறார், இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறும் அப்போது நடைபெற்று வந்திருக்கிறது. ஆனாலும் கோபால் எவ்வளவு எச்சரித்தும் அந்த பெண்மணி வெங்கியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதோடு அந்தப் பெண்மணி வெங்கியுடன் குறுஞ்செய்தியின் மூலமாகவும், தொலைபேசியின் மூலமாகவும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதன் காரணமாக, கோபால் தன்னுடைய மனைவியின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விசாகப்பட்டினம் கோகுல் பார்க் அருகே கோபாலும், அவருடைய மனைவியும் சந்தித்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண்மணி வெங்கியுடன் பழகுவது தொடர்பாக தன்னுடைய மனைவியை கோபால் கண்டித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதாவது, நேற்று அதிகாலை அவரை அதை பார்க்கிற்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது இது தொடர்பாக விசாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன