சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதன் காரணமாக சின்னம்மாள் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 2013 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி உயிரிழந்தார்.
இது குறித்து மேச்சேரி காவல்துறையினர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொலை வழக்கில் குமாருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து, குமாரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.