சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்து சமேஷா முபின் (28) என்ற நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இதனைத் தொடர்ந்து, அவருடைய வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப்படும் ரசாயனங்கள் உள்ளிட்டவை கைப்பற்ற பட்டனர். அதன் பிறகு தமிழக அரசிடம் இருந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்து மேலும் சில தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதற்கு பின்னர் நவம்பர் மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கனனடா மாவட்டம் மங்களூர் டவுன் நகுரி பகுதியில் ஆட்டோவில் எடுத்துச் சென்ற குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் தீவிரவாதி ஷாரிக் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த இரு சம்பவத்தை தொடர்ந்து, அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் தேசிய திறனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தனர். அத்துடன் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனும், மங்களூர் தீவிரவாதி ஷாரிக்கும் கோயமுத்தூரில் சந்தித்து பேசிக்கொள்ளவதாக தகவல் கிடைத்தது.
இந்த சூழ்நிலையில் தான் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு கோவை கார் வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இது குறித்து அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்களை கொண்ட அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறது.