35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு ’நாயகன்’ திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும்  திரைப்படமாக நாயகன் இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி அதன் பின்னர் இணையவில்லை. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு  கமல்ஹாசன் – மணிரத்னம் ஆகியோர் இணையவுள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கு பிறகு நாயகனுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்..!! வெளியான மாஸ் அறிவிப்பு..!!

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கின்றன. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம். 

Chella

Next Post

உச்சக்கட்ட பரபரப்பில் டி20 உலகக் கோப்பை..!! அரையிறுதியில் மோதும் அணிகள் எவை..?

Mon Nov 7 , 2022
உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர். இன்னும் மூன்றே போட்டிகள்தான். யார் 2022 ஆம் ஆண்டிற்கான கோப்பையை வசப்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அரையிறுதி ஆட்டம் நாக் அவுட் ஆட்டம் என்பதால் பரபரப்பு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. வென்றால் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையென்றால் வெளியேற வேண்டியதுதான். நேற்றைய 3 போட்டிகளில் நடந்தது என்ன..? 1. முதல் போட்டியில் பலம் வாய்ந்ததாக […]
உச்சக்கட்ட பரபரப்பில் டி20 உலகக் கோப்பை..!! அரையிறுதியில் மோதும் அணிகள் எவை..?

You May Like